ஜனவரி 2024 தொடக்கம் ஜனவரி 2026 வரையான காலப்பகுதியில் சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கையில் முன்னெடுத்த ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தென் மாகாணத்தில் தனியார் தேயிலை தோட்டங்கள் மற்றும் சிறு தோட்டங்களில் மலையகத் தமிழ் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உரிமைத் துஷ்பிரயோகங்களில் இந்த ஆய்வு கவனம் செலுத்தியிருந்தது.

