பலவந்தமாக அல்லது விருப்பத்துக்கு மாறாக கொண்டுசெல்லப்பட்டு காணாமல்போனவர்கள் பற்றிய ஐநா பணிக் குழு (WGEID) கடந்த பதினைந்து ஆண்டுகளில் முதல் தடவையாக இலங்கைக்கு வருவதற்கு ஆயத்தமாகிவருகிறது. இலங்கையில் காணாமல்போன ஆயிரக்கணக்கானவர்களின் உறவினர்களிடம், இந்த முக்கியப் பயணம் நம்பிக்கையை அதிகரிக்கும். காணாமல்போன தமது உறவுகளின் கதி பற்றி ஐநாவின் உதவியில் கடைசியில் ஒருவழியாக தாம் அறிந்துகொள்ள வழிபிறக்கும் என்றும், நீதியையும் இழப்பீடும் கிடைக்கும் வாய்ப்பு வரும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.